Loading...
Monday 22 July 2013

வசதியான வீடு!(குட்டிக்கதை)

ஓரளவு வசதி படைத்த ஒருவர், தம்முடைய வீட்டை விற்று விட்டு அதை விட வசதியான ஒரு வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார். உடனே தரகரிடம் சென்று வீட்டை விற்றுத் தருமாறு கேட்டார்.


 உடனே தரகர், "நானே பத்திரிகையில விளம்பரம் செய்து வித்துத் தரேன் சார்" என்று கூறியதுடன், அழகிய வாசகங்களுடன் பத்திரிகையில் விளம்பரம் செய்தார். அடுத்தநாள் தரகர் சுமார் பத்து முறை வெவ்வேறு ஆட்களை அழைத்து வந்து வீட்டை சுற்றிக் காட்டினார்.

 வீட்டின் சொந்தக் காரருக்கு ஆச்சரியம். உடனே பத்திரிகையில் வெளியான விளம்பரத்தைப் பார்த்தார். அதில் குறிப்பிட்டிருந்த தன் வீட்டின் வசதிகளைப் பார்த்த அவர், "அடடா, நம்ம வீட்டுலயும், வீட்டைச் சுத்தியும் இவ்ளோ வசதிகள் இருக்கா...இப்பத்தானே வீட்டோட அருமை தெரியுது" என்று ஆச்சரியப்பட்டு, உடனே தரகரிடம் சென்றார்.

 "வீட்டை விக்கற யோசனையை நான் கைவிட்டுட்டேன். இனி எப்போதும் விக்கறதா இல்லை. மன்னிச்சுடுங்க" என்று சொல்லி விட்டு வந்தார். இன்றைக்கு நம்மில் பலரும் இதே மனநிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறோம்.

நமது பலம் என்ன என்பது நமக்கே தெரியவில்லை. பலவீனங்களையே நமது மனம் அதிகமாக படம் பிடித்துக் காட்டுகிறது. அதன் காரணமாகவே வாழ்க்கையில் சோர்ந்து போகிறோம். அறிவின் வெளிச்சத்தில் நடைபோடுகிறபோது, இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்படுவதில்லை.

0 comments:

Post a Comment

 
TOP