Loading...
Friday 5 July 2013

சுஜாதா....!!! (சிறுகதை)

மெல்லிய தேகத்தில் - தமிழ்
சொல்லிய இதழோடு - நெஞ்சை
அள்ளிய அழகோடு - மெல்ல
துள்ளி ஓடும் பருவப் பெண்...!!!


கல்லூரி மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தாள்.
கல்லூரி முடிந்ததும் அவளுக்கு திருமணம் முடிக்க, வரதராஜன் , அவளது அப்பா முடிவு பண்ணி இருந்தார்

காதல் கடிதங்கள் நிறைய வந்தும் - அவற்றை கண்டு கொள்ளாமல் - படிப்பில் மட்டுமே கவனத்தில் வைத்திருந்தாள் சுஜாதா....

மேலே படிக்க வேண்டும் நிறைய சம்பாதிக்க வேண்டும் - இது மட்டுமே அவளது கனவாக இருந்தது......

கல்லூரி முடிந்து - காம்பஸ் நேர்முகத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல வேலையில் சேர்ந்து மாதம் 50000 ரூபாய் சம்பாத்யத்தில் சேர்ந்து விட்டாள்

வரதராஜன் அவளுக்கு வரன் தேடத் தொடங்கினார்

ஆனால் - சுஜாதா கல்யாணப் பேச்சு எடுக்கும்போதெல்லாம் எரிந்து விழுந்தாள்.....

சரி யாரையாவது காதலிக்கிறியா சொல்லு அவனையே பேசி முடிச்சிரலாம் - வரதராஜன் வெளிப்படையாக கேட்டும்

அதுல்லாம் ஒன்னும் இல்ல - கல்யாணமும் வேண்டாம் ஒரு கருமாதியும் வேண்டாம் - சட்டென்று எரிந்து விழுந்தாள் சுஜாதா

மகளின் இந்தப் போக்கு அப்பாவுக்கு மனக் கஷ்டத்தை கொடுக்க - எவ்வளவோ திருத்த முயன்றும் - முடியாமல் இறுதியில் வரதராஜன் இறந்தே போனார் - மகளின் கல்யாணத்தை பார்க்காமல்.....

வருடங்கள் பல உருண்டோடியது......

தலை நரைத்து - கண்கள் குழி விழுந்து - தோல் சுருங்கி படுக்கையில் கிடந்தாள் சுஜாதா......

கவனிக்க பணியாளர்கள் இருந்தும் - அவர்கள் பண ரொட்டிக்காக அலையும் மனித நாய்களாக ( நாய்கள் மன்னிக்க....!!! நீங்கள் நன்றி உள்ளவர்கள் )
தென் பட்டார்கள்....!!!

அவளது மனம் நினைக்கத் தொடங்கியது.....

பெரிய தவறு செய்து விட்டேனே....!!!

காதல் கடிதம் வந்தபோது காதலித்தால் கல்யாணம் செய்யனும் - பிறகு கர்ப்பம் - செலவு - செலவு - செலவு - செலவு - செலவு - பணம் பறி போய்விடும் என்று பணத்தாசையில் - முட்டாள் தனமாக என் வாழ்வை சீரழித்து விட்டேனே.....

சுயநலமாக வாழ்ந்து என்ன சுகத்தை நான் கண்டு விட்டேன் ...?

இப்படி எண்ணிய படியே வெறித்திருந்தது சுஜாதாவின் இமைகள் விட்டத்தை வெறித்த படி

அவள் எப்போதோ இறந்து போய் இருந்தாள்......

பெட்டியில் அவளது தங்க நகைகள்......
அனாதையாக இல்லாமல் இன்னுமொரு சோம்பேறிக் கூட்டத்தை தயார் படுத்த தன்னை ஆயத்தப் படுத்தியது.......

வரவு செலவு கணக்கில் - நிச்சயம் பணம் தேவையா ? கொஞ்சம் நாமும் சிந்திப்போமா ?

0 comments:

Post a Comment

 
TOP